Tuesday, June 18, 2013

சிறுநீரக மோசடி...., பணத்திற்காக விலைபோன டாக்டர்கள்..., வெளிவராத பின்னணி தகவல்கள்....

கடந்த ஒரு வாரமாகவே சிறுநீரக (எ) கிட்னி மோசடியை பற்றித்தான் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி - உட்பட நான்கு மாவட்டங்களிலும் பரபரப்பு பேச்சாக பேசப்படுகிறது..

தர்மபுரியில் கைது படலம் நடந்தாலும் இதன் ஆரம்ப கைது புள்ளி என்னவோ நாமக்கல் மாவட்டம் பெரியமணலியும், குமாரபாளையந்தான் என்கிறது காவல்துறை வட்டாரம். பிடிப்பட்ட கிட்னி மோசடி குமபலின் மூளையாக செயல்பட்ட அய்யாவு சங்ககிரியை சேர்ந்தவர். தனது சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்களையே, அதுவும் ஏழையாக பார்த்து பிடித்து, அவர்களை பணத்தாசை காட்டி மயக்கி கிட்னி தானம் கொடுக்க வைத்து மோசடியில் ஈடுப்பட்டிருக்கிறார் அய்யாவு.

இதுவரை கிட்னி மோசடியில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யபட்டிருக்கின்றனர். அதில் மருத்துவரான சேலம் டாக்டர் கணேசன் என்பவரும் அடக்கம். கைது செய்யபட்டவர்கள் ஜெயிலில் அடைக்கபட்டாலும், கிட்னி மோசடி விவகார விசாரணை தர்மபுரியில் தொடர்கிறது. இந்த நெட்வெர்க்கில் அய்யாவுதான் மெயினான மூளையாக செயல்பட்டிருக்கிறார். டாக்டர் கணேசனும் சங்ககிரி பக்கந்தான் சொந்த ஊர் என்பதால் அய்யாவுக்கும், கணேசனுக்கு நல்ல பழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கிறது. அந்த பழக்கந்தான் இந்த மோசடிக்கு வித்திட்டு இருக்கிறது. Read More....

No comments:

Post a Comment