Friday, April 27, 2012

முதலீட்டாளர்களை ஏமாற்றும் ஈமு கோழி நிறுவனங்கள் - சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டு

முதலீட்டாளர்களிடம் இருந்து பெறும் தொகைகளை வேறு நிறுவனங்களில் மறைமுகமாக ஈமு கோழி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு எழுப்பியுள்ளனர்.

திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம்,நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் புற்றீசல் போல் ஈமு கோழி பண்ணைகள் தோன்றி வருகின்றன.கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கவர்சிகரமான சலுகைகள் என முதலீட்டாளர்களை  இந்நிறுவனங்கள் கவர்ந்து வருகின்றன. அதிக வட்டி, அதிகமான மாத வருமானம் மற்றும் போனஸ், முதலில் வரும் நூறுபேருக்கு தங்க நாணயம் என முதலீட்டாளர்களுக்கு “புற்றீசல்’ ஈமு கோழி நிறுவனங்கள் வலைவிரித்து வருகின்றன.ஓட்டல் மெனு கார்டு போல் தங்களது கவர்ச்சி திட்டங்களை அட்டவணைப்படுத்தும் இந்த நிறுவனங்கள் ஒரு படி மேலே போய் தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும் எனவும் வலை விரித்து வருகின்றன. Read More....

Monday, April 23, 2012

விஜயகாந்த்தின் அன்பும், ஆவேசமும்.

நேற்று திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்ட விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்களை திட்டி,மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.அப்படி அவர் காட்டிய இரு முகங்கள் இங்கே வாசகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது... மேலும் பார்க்க