Sunday, June 9, 2013

கல்லூரி...கன்சல்டன்சி...கமிஷன்...அடிதடி... கொலை.... - நாமக்கல் கல்லூரிகளின் மறுபக்கம்...!

‘‘ காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை, சக கல்லூரி மாணவர்கள் கைது..?’’ இரண்டு மாதங்களுங்கு முன் நாமக்கல் மாவட்ட பரபரப்பு செய்தி இது. நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமான கல்வி நிறுவனத்தில் படித்த கேரள மாணவர் தீபக் கார் ஏற்றி கொலை செய்யபட்டடார். கேரள மாணவர்கள் கோஷ்டி தகராறில்தான் இந்த வன்ம கொலை நடந்ததாக எல்லா முன்னணி பத்திரிக்கையிலும் தலையங்கம் எழுதப்பட்டது. காவல்துறையோ காசுக்காக கண் முன் நடந்த, நடக்கிற வழக்கையே மாற்றி எழுதும். குற்றவாளிகள் கையில் கிடைத்தால் விடுமா..? பத்திரிக்கை கதையையே போலீசும் ஃபாலோ-அப் பண்ணியது.

ஆனால்..நடந்தது கமிஷன் கொலை... என்பதுதான் உண்மை. அரசியலில்தான் டெண்டர், கமிஷன் என்று கொலை வரை நீளும் கொடூரத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. ஆனால்...

கல்லூரியில் கிடைக்கும் கமிஷனுக்காக... ஒரே கல்லூரி, ஒரே  மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தனது சக கல்லூரி, சக மாநில மாணவரையே காரை ஏற்றி கொன்றது வெளிச்சத்துக்கு வரவில்லை. மாறாக கோஷ்டி பூசல் கொலையாகத்தான் விசயம் வெளிவந்தது. வெளிச்சத்துக்கு வந்த சில விசயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்த கல்லூரி-யை குறை சொல்வதோ, சட்டத்தை கல்லூரி வளைத்துவிட்டது என்று சொல்வதோ நமது நோக்கமல்ல.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பலான கல்லூரிகளில் இந்த கமிஷன் வேலை நடக்கிறது. ‘மாணவர்கள் கமிஷன் வாங்கி கொண்டு ஆட்களை சேர்த்துவிடலாம்.’ என்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகமே தூண்டுகிறது என்ற உண்மையை சொல்லுவதுதான் நமது எண்ணம்.

நாம் கல்லூரி கமிஷன் அலசல்களை பார்ப்பதற்கு முன், மாணவர் கொலையை கொஞ்சம் பார்த்துவிடலாம்..? Read More....

No comments:

Post a Comment