Monday, September 10, 2012

திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம், இன்டர்நெட், எஸ்.எம்.எஸில் வதந்தி பரப்புவர்கள் மீது போலீசில் புகார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உண்மைக்கு மாறாக இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ்களில் வீண் வதந்திகள் பரப்பட்டு வரப்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த கோரி கல்லூரி நிர்வாகம் சார்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் பிடெக் ஐடி இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஊத்தங்கரை, காட்டேரி, வேப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகள் காயத்திரி(19) தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து கல்லூரி விடுதி அறையில் கடந்த 2.9.2012 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More....