திருச்செங்கோடு அருகே விவசாய வயலில் இருந்து ஆயிரம் ஆண்டு பழமையான விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(35) என்பவரது வயலில் நேற்று காலை மரவள்ளி கிழங்கு பயிரிடுவதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வயலை சமப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்பொழுது வயலின் ஒரு பகுதியிலிருந்து மண்ணை அள்ளியபோது அதனுடன் மூன்று அடி உயரமுள்ள சிலை வந்தது. இதனை கண்ட விவசாயிகள் தங்களது பணியை நிறுத்துவிட்டு மண்ணில் இருந்து சிலையை தனியே எடுத்து பார்த்தனர். மேலும் படிக்க.....